ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!
உசிலம்பட்டியில் முப்படைகளின் தலைமைத் தளபதி உயிரிழந்ததற்கு பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.






