அதிகாரத்தில் நேர்மைக்கு இடமில்லை என்று தெரிவித்த சகாயம்..!
அதிகாரத்தில் நேர்மைக்கு இடமில்லை என்று விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் நாகஜோதியை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.
மதுரையில் வீதிவீதியாக சென்று அவர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று சகாயத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பேசிய சகாயம் அதிகாரத்தில் நேர்மைக்கு இடமில்லை என்பதால் மூன்றாண்டுகளுக்கு முன்பே அரசு பணிகளில் இருந்து விலகி தமிழ்ச்சமூகத்தில் மக்களுக்கு நேர்மையான மாற்றத்தை உருவாக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.






