சாலையை கடக்க முயன்ற அரிய வகை பச்சோந்தி..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையை கடக்க முயன்ற அரிய வகை பச்சோந்தி பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வரைந்து கொண்டிருந்த போது சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு இந்த பச்சோந்தி கடப்பதற்கு சிரமப்பட்டது.
இதனை கண்ட மோகன் என்ற இளைஞர் பத்திரமாக மீட்டு திண்டிவனம் தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் இந்த அரியவகை பச்சோந்தி வனத்துறையினர் மூலம் காப்பு காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.







