விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் நலம் விசாரித்த பிரதமர் மோடி..!
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சரோஜ்பந்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விரைவில் ரிஷப் பந்த் குணமடைய வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.





