வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான கர்ப்பிணி..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த 8 மாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மோகன் தனது குழந்தை மற்றும் 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் தனது பைக்கில் கண்டாச்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மேல்வாளை அருகே சென்ற போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனங்கள் உரசி விபத்துக்குள்ளான.
இருசக்கர வாகனம் மோதி விடக் கூடாது என எண்ணிய மோகன் பிரேக் அடித்த நிலையில் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.







