மணலைக் கொட்டி சாலையை சீரமைத்த காவலர்..!
கனமழையின் காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் அடுத்துள்ள ஓஎம்ஆர் சாலையில் தேங்கி இருந்த தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பணியில் இருந்த கேளம்பாக்கம் போக்குவரத்து காவலர் ராம்குமார் மண்வெட்டியால் மணல் எடுத்து வந்து பள்ளமான பகுதியில் கொட்டி சீரமைத்தார்.





