பாமக பிரச்னை மே 11ல் தீர்ந்துவிடும்: சீமான்
பாமக மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என சீமான் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் பிரச்னை மிகவும் சாதாரணமானது. இதனால் இருவருக்கும் இடையே பெரிய அளவில் பிரிவு ஏற்படாது.
மே 11 அன்று நடக்கும் மாநாட்டின்போது அனைத்தும் சரியாகிவிடும் என தெரிவித்தார். பாமகவில் இருந்தவன் என்பதால் மாநாட்டிற்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன் என்றும் கூறினார்.





