போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையுடன் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை அவர் என போப் பிரான்ஸூக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
மனித நேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் என சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.





