ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்..!
புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும் சென்னை காசிமேடு , எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகம் தொடர்ந்து அதே நிலையில் நீடித்து வருவதால் தொடர்ந்து மூன்று நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பயங்கர சத்தத்துடன் கடல் அலைகள் எழும்புகின்றன.
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே கடற்கரையில் நின்று சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.







