பஹல்காம் விவகாரம்: டெல்லியில் அவசரக் கூட்டம்!
மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் தலைமையில் டெல்லியில் அவசரக் கூட்டம் நடக்கிறது. நாளை(மே 7) நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தப்பட உள்ள நிலையில், விமானப்படை, கப்பல் படை, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு உறுதி செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



