மதுரையில் சிலப்பதிகார பூங்கா திறப்பு விழா.. எப்போது தெரியுமா?
கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப்பூங்கா – காவியத்தில் விவரிக்கப்பட்ட மரங்களை கண்முண் நிறுத்திய காவல் கண்காணிப்பாளர்.
மதுரை மாவட்டம் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகார பூங்காவை ஏற்படுத்தியதோடு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட மரங்களையே அங்கு வளர்த்து அழகு கூட்டியிருக்கிறார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்.
வருகிற 01.06.2020-ம் தேதியன்று திறப்பு விழா காண்கிறது. இந்த சிலப்பதிகாரப்பூங்காவில் மதுரையைப் பற்றிய பல குறிப்புகள் சங்கால இலக்கியங்கள் போன்றவற்றை இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.






