ஒடிசா ரயில் விபத்து – உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்..!
ஒடிசா ரயில்வே விபத்தில் உயிரிழந்த பலரது உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய உடல்களை மரபணு பரிசோதனை மேற்கொண்டு அடையாளம் காணும் பணியில் புவனேஸ்வர் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.
விபத்தின் பொழுது உடல்கள் ஒன்றுடன் ஒன்று நசுங்கி கடுமையான முறையில் சேதம் அடைந்துள்ளதால் அவற்றை தனித்தனியாக பிரித்து மரபணு பரிசோதனைக்காக அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.






