அனுமதி இன்றி பேனர் வைத்தால் இனி சிறை தண்டனை – தமிழக அரசு புதிய உத்தரவு
கோவையில் பேனர் விருந்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் விளம்பர பலகைகள், பேனர்கள் அனுமதி இன்றி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.
புதிய சட்டம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது.
உரிமை காலம் முடிந்த பின்பும் வைக்கப்பட்டுள்ள அனைத்து பானர்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.






