புதுச்சேரியில் அமலாகிறது புதிய கட்டுப்பாடுகள்..!
புதுச்சேரியில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரொனா பாதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இரவு 12 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முககவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்கவும் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கோயில்கள் அனைத்தும் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






