கொரானா போரில் “நெஸ்லே” சிறப்பான பங்கு
கொரொனாவுக்கு எதிரான போரில் சிறப்பான பங்காற்ற தயாராகுமாறு நெஸ்லே நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேகி, சூப் வகைகள், கிட்கேட், சாக்லேட்டுகள், பிஸ்கட், காபி உள்ளிட்டவற்றுக்கு பெயர் பெற்ற நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2 லட்சத்து 90 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பொருட்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்ய பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சுழற்றியடிக்கும் புயலை தாக்க தயாராகும் அர்ப்பணிப்பு, கட்டுப்பான பணித்திறன் மூலம் நிறுவனத்தின் வணிகவியலில் புதிய மைல்கல்லை ஏற்ற கூடுதல் முயற்சிக்கான உரிய தருணம் இது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.







