பாலியல் புகாரில் சிக்கியுள்ள உதவி பேராசிரியரை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!
பாலியல் புகார் எழுந்துள்ள ஸ்டான்லி மருத்துவமனை உதவி பேராசிரியரை கைது செய்யக்கோரி தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனையில் முதுநிலை மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி நிலையங்கள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாரணை கமிட்டி செயல்பட தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






