பேஸ்புக்கில் உருவான காதல்.. திருமணத்திற்கு முன்பே கிழிந்த முகத்திரை..!
பிரபல சினிமா பாடகர் போல போலியான முகநூலில் பழகி பெண்ணிடம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கலை சேர்ந்த பெண்ணிடம் முகநூல் வழியாக நட்பாக பேசி பழகி அந்த நபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 24 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி வந்துள்ளார்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர் போலீசில் புகார் அளித்தார். அவரிடம் இருந்து சொகுசு கார், இரு சக்கர வாகனம் மற்றும் இரண்டு ஐ போன் உட்பட 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






