--- --:--:-- --

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு! சுரேஷ் தாயாரின் காவல் நீட்டிப்பு

11

திருச்சி லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷின் தாயார் கனகவல்லி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சுரேஷ் என்பவரின் தாயார் கடக பள்ளியை கடந்த ஐந்தாம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இதனையடுத்து நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் கனகவள்ளி அடைக்கப்பட்டார் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

 

தொடர்ந்து கனகவல்லியை நவம்பர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார் இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon