ட்ரோன்களை இடைமறித்த குவைத்
மின் உற்பத்தி நிலையம் மீதான முந்தைய தாக்குதலுக்குப் பிறகு ஐந்து ட்ரோன்களை குவைத் இடைமறித்தது.குவைத் தேசிய பாதுகாப்புப் படை ஐந்து ட்ரோன்களை இடைமறித்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத்தில் உள்ள ஒரு மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று, கடந்த 24 மணி நேரத்தில் நடந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், இராணுவ முகாம்கள் மீதான ஈரான் தாக்குதல்களில் தங்களது 10 வீரர்கள் காயமடைந்ததாகவும், ஒரு தனியார் தளவாட நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கும் குறிவைக்கப்பட்டதாகவும் குவைத்தின் ஆயுதப் படைகள் தெரிவித்திருந்தன.





