கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் எச்சரிக்கை..!
வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து பொய் பரப்புரை மேற்கொண்டு வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை வளர்க்க விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனை வழங்கி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின.
இது பொய்யான தகவல் என்பது உறுதியான நிலையில் இது போன்ற பொய் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா சார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.





