அரையாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறதா..?
அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அதற்கு அடுத்த ஐந்து நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.






