கடந்த 4 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று..!
கடந்த நான்கு நாட்களில் சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.
நேற்று ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது





