கேரளாவில் கட்டுப்பாட்டு இழந்த பஸ் டெம்போ மீது மோதும் கோர காட்சி..!
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த டெம்போவில் பயங்கரமாக மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு மணி நேரம் போராடி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.





