ஹிஜாபை தொட்டால் தொட்டவனின் கைகளை வெட்டுவோம்..!
ஹிஜாபை தொட முயற்சிப்பவர்களின் கைகள் வெட்டப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் ரூபினா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளதால் இந்த பிரச்சனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று பேசிய உத்திரப்பிரதேச சமாஜ்வாதி கட்சி தலைவர் ரூபினா இந்தியாவின் மகள்கள் மற்றும் சகோதரிகளுடன் கண்ணீருடன் விளையாட முயற்சித்தால் அவர்கள் ஜான்சிராணி மற்றும் ரஷ்ய சுல்தானா போல மாறி விடுவார்கள் என எச்சரித்துள்ளார்.
மேலும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு ஒரு நபர் நெற்றியில் திலகம் வைத்திருப்பதால் அல்லது தலைப்பாகை ஹிஜாப் அணிந்தவர் என்பது முக்கியம் அல்ல எனவும் தலைப்பாகை மற்றும் ஹிஜாப் ஆகியவை இந்திய கலாச்சாரம் மற்றும் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஒன்றாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.





