நான் அனைவருக்கும் பொதுவானவன் : அமைச்சர் உதயநிதி
நான் அனைவருக்கும் பொதுவானவன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.
விழாவில் பேசிய உதயநிதி தான் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்னது வைரலானதாக சுட்டிக்காட்டினார். தற்பொழுது புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்களை கூறுவதாக குறிப்பிட்ட உதயநிதி, ரம்ஜான் வாழ்த்துக்களையும் சொல்வேன் என்று குறிப்பிட்டார்.
நான் எல்லோருக்கும் பொதுவானவன் என்று மக்கள் அனைவரின் செல்லப் பிள்ளையாக என்றுமே இருப்பேன் எனவும் உதயநிதி கூறினார்.





