பெங்களூரில் பல்வேறு இடங்களில் கனமழை..!
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் குளம் போல் காட்சியளிக்கின்றன. பெங்களூருவில் 12 மணி நேரத்தில் 11.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மல்லேஸ்வரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. அந்தப் பகுதியிலுள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.






