ஆஸ்திரேலியாவை புரட்டி போட்ட கனமழை..!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளப்பெருக்கல் சிக்கி ஐந்து பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.





