நகராட்சி குப்பை கிடங்கில் கடும் தீ விபத்து..!
திருவண்ணாமலையில் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்பு புகை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.






