--- --:--:-- --

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு..!

5

சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் சந்தோஷ் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.

 

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பிறப்பித்த இந்த சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை ரத்து செய்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

 

ஆனால் ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்புகள் ஆகும் நிலையில் கூடுதல் ஆதாரங்களோடு ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

 

இந்த நிலையில் தமிழகத்தின் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்தும் அவசர சட்டங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த குழு 2 வாரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon