உளவு பார்க்க அரசுக்கு உரிமை உள்ளது – பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்
உளவு பார்க்க அரசுக்கு உரிமை உள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் அரசு நிர்வாகத்தை நம்பி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அந்த காலத்தில் மன்னர்கள் ரகசியமாக ஊரில் சென்று வருவார்கள்.
அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.






