முதியவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர்..!
ஈரோட்டில் முதியவர் ஒருவரை அரசு பேருந்து நடத்துநர் தாக்கும் காட்சிகள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சித்தோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணம் செய்த கணேசன் என்ற முதியவர் பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு அதற்கான கட்டணத்தை கொடுக்கும்போது அது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை தவறாக புரிந்து கொண்ட பேருந்து நடத்துனர் மது போதையில் தகராறு செய்வதாக கூறி அவரை தாக்கியுள்ளார்.







