வாட்ஸ் அப்-க்கு மாற்றாக ‘GIMS’ செயலி உருவாக்கம்
வாட்ஸ்அப் செயலி போன்று கிம்ஸ் எனப்படும் செயலிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 30 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் இஸ்ரேலின் என்எஸ்ஓ எனும் குழுமம் உளவு மென்பொருளை பயன்படுத்தி முக்கிய நபர்களை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கிம்ஸ். எனப்படும் செயலிகளை உருவாக்கி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் சோதனை செய்யப்பட்டது. கிம்ஸ் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இயங்கும் என்றும் சோதனைக்குப் பிறகு அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






