வீட்டில் பெட்ரோல் குண்டு.. தனக்குத்தானே சூனியம் வைத்த நபர்..!
கும்பகோணம் அருகே துக்காச்சி பகுதியில் தனது வீட்டிற்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சுல்தானா என்பவரை கைது செய்ததோடு ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






