பசி உள்ளவர்களுக்கு இலவச உணவு..!
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் ஆலயத்தின் பொதுமக்கள் பசியாறும் வகையில் உணவு பொட்டலங்கள், பிரட் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதசாரிகள், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் எவ்வித ஆட்சேபனையும் இன்றி தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துச் சென்று பசியாறி வருகின்றனர். இலவசமாக பசியாற உணவு படைக்கும் கோவில் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.





