திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. இருப்பினும், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கத் தேவையில்லை என்றும், நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 63 ஆயிரத்து 837 பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.2.85 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.






