25 லட்சம் போட்டால் 85 லட்சம் வரும் எனக்கூறி மோசடி..!
இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யும் யூனிட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறுவதாக கூறி தங்களிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் சிபிஐக்கு மாற்ற கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்களை மட்டும் குறி வைத்து நடத்தப்பட்ட மோசடி நடந்து இரண்டு ஆண்டுகளான போதும் அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





