ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் மனைவி..!
கடினமான நேரத்தில் தனக்கு ஆதரவு அளித்ததாக கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அவரது முன்னாள் மனைவி சாய்ராபானு நன்றி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளரான ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவி சாய்ரா பானு ஒருவரை ஒருவர் விவாகரத்து பெற்று தனித்தனியே வசித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சாய்ரா பானு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உடல் நலம் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னை நலம் விசாரித்து கடினமான நேரத்தில் ஆதரவு அளித்ததாக கூறி முன்னாள் கணவர் ஏ.ஆர் .ரகுமானுக்கு சாய்ரா பானு நன்றி தெரிவித்துள்ளார்.





