ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர் ஆலோசனை..!
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருடன் காணொளி முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. 27-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
பண, வினியோகம் பரிசுப் பொருட்கள் குறித்த புகார்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பண விநியோகம் உள்ளிட்ட முறைகேடுகள் விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் வெளியான நிலையில் ஆலோசனை நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் அஜய் பாது காணொளி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார்.






