கோவை அருகே ஒற்றை கொம்பு யானை தாக்கி முதியவர் காயம்!
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை! கோவை, நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென புகுந்த ஒற்றை கொம்பு யானை அங்கிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் காரை சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானை தாக்கியதில் சப்தகிரி (90) என்ற முதியவரின் இரு கால்களில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.





