--- --:--:-- --

விஜய் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யாதீர்கள் – நடிகர் ஆரி

13

மிழ் சினிமாவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் ஒரு சிறந்த நடிகர். 69 படங்கள் தமிழில் நடித்துள்ளார், அத்தனை படங்கள் நடிப்பதற்குள் விஜய் சந்திக்காத வெற்றியும் இல்லை பிரச்சனை இல்லை. ஆனால் அனைத்தையும் அசால்டாக டீல் செய்து இப்போது புகழின் உச்சத்தில் உள்ளார்.பெரிய உச்சத்தை எட்ட துணையாக இருந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என பல கோடி சம்பளம் வரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் அரசியலிலும் நிறைய டப் சம்பவங்களை எதிர்க்கொண்டு வருகிறார்.விஜய் சினிமாவில் நடிப்பதை விடுத்து அரசியலில் முழு ஈடுபாடு காட்டிவரும் நிலையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்து ஒரு விஷயம் சமீபத்தில் வெளியானது.

 

அதாவது நடிகர் விஜய்யின் மனைவி சங்சீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த விஷயத்தால் விஜய் குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்தன.இந்த நிலையில் பிரபல நடிகர் ஆரி விஜய்யின் விவாகரத்து பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.

 

விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, அதில் கருத்து சொல்வது அநாகரிகமானது. விஜய்க்கு மட்டுமில்லை பலருக்கும் இதுபோன்று நடக்கிறது.அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல, சோசியல் மீடியா வளர்ச்சி அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது என கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon