பள்ளி உடையில் தாலியுடன் மகள்..அதிர்ச்சியடைந்த பெற்றோர்..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும், சக வகுப்பு மாணவனும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியானதால் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
போலீசார் தலையிட்டதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். பள்ளி சீருடையில் சிறுமியை பள்ளி சிறுவன் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






