குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரொனா பரிசோதனை..!
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் குடியரசுத் துணைத்தலைவரின் மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.




