தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா..!
தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 15 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 250 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.






