18 ஆண்டுகளுக்குப் பிறகு குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதை திறப்பு
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே சுரங்க பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள், நில எடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் திமுக ஆட்சியில் விரைவு படுத்தி 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது!





