இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகம், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





