கேரளாவில் இடி. மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.