துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போன்..!
பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. பிரேசில் மாநகரில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தின் பொழுது பெட்ரா என்பவரை நோக்கி கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றான்.
பாக்கெட்டில் வைத்திருந்த ஐந்து ஆண்டுகள் பழமையான செல்போன் அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தியது. இடுப்பில் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெற்றோர் பின்னர் வீடு திரும்பினர். சேதமடைந்த செல்போனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார்.







