வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
12,838 பதவி இடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் காலை 10 மணி முதல் வேட்பு மனுக்களை அளிக்கலாம். சனிக்கிழமையும் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.





