பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரின் அருகே பறந்த கருப்பு பலூன்கள்..!
black balloons released at Vijayawada airport during PM's visit
ஆந்திரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூனை கட்டிய காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து விமானத்திற்கு பிரதமரின் ஹெலிகாப்டர் புறப்படுவதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்க விட தொடங்கினர்.
சில நிமிடங்களில் ஆகாயத்தில் பறந்த பலூன்கள் இடையே பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மற்றும் பாதுகாப்பு பணிக்காக சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் கடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






