--- --:--:-- --

திமுக நிகழ்ச்சியில் பிரியாணி..100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்!

6

துரை மாவட்டம் வில்லூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய போது டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வந்திருந்தவர்களுக்கு வழங்கப் பட்டு உள்ளது.மதுரை மாவட்டம் வில்லூரில், திமுக சார்பில் நேற்று பொது உறுப்பினர் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மதியம் கூட்டம் முடிந்த நிலையில் சில்வர் தட்டு, பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது.

 

இதை அங்கிருந்த மக்கள் வீட்டிற்கு கொண்டு வந்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் கூட்டத்தில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

 

மேலும் வில்லூர் மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

 

வீட்டிற்கு எடுத்துச் சென்று நேரம் கழித்து பிரியாணி சாப்பிட்டவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டதாக திமுக தரப்பு கூறுகிறது. 100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon